Monday, May 2, 2011

அன்பு கிலோ என்ன விலை?

இன்றைய உலக வாழ்வில் பெற்றோர் குழந்தைகளுக்கு இடையில்,உற்றார் உறவினருக்கு இடையில்,நண்பர்களுக்கு இடையில்,கணவன் மனைவிக்கு இடையில் உள்ளதெல்லாம் அன்பு தான?அன்பு என்று ஒன்று உண்டா?

அன்பு என்பதன் வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?

அன்பு என்பதே ஒரு சுய நலம் சார்ந்த வார்த்தை தானா? எல்லா மனிதர்களும் தனது சுயநலத்திர்காகத்தான் அன்பு செலுத்திகின்றார்களா?தான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்பு செலுத்திகின்றார்களா?இல்லை அன்பு செலுத்தப்படுபவர்நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாரா?

காதல் இல்லாமல் (இல்லாமலும் ) உலகம் இயங்கும்

காதல் என்பது சரியோ பிழையோ தெரியாது. காதல் அனுபவம் என்பது பலருக்கு கசப்பாக (Almost 99%) அமைந்தும் இருக்கிறது. அதில் திட்டமிட்ட ஏமாற்றங்களும் அடங்கும். ஒருத்தரோட முளைத்த காதல் தேவைகள் வசதிகள் பெருக.. பிறகு சிறகு கட்டி பறந்து இன்னொருத்தரோட தொத்தி பிறது அது இன்னொருத்தர் மேல தொத்தி.. அப்பப்பா.. இதுகளையும் நீங்கள் காதல் என்றோ வரையறுக்கிறீங்கள்.

இப்படியான நாய்க் காதல் செய்யும் மனித ஜந்துகளையும் சமூகத்தில் காண முடிகிறது தானே..! இவற்றையும் காதல் என்று வரையறுத்தால்.. உங்களின் வரையரை அப்படி.. எங்களுக்கு அப்படி அன்றியும் இருக்கலாம் அல்லவா.

எனக்கொன்னவோ காதல் என்ற பெயரில் மனித மிருகங்கள் தங்கள் தேவைகளை இச்சைகளை தீர்த்துக்கொள்ள அலைகின்றன என்று தான் தெரியுதே தவிர.. வேற ஒன்றும் தெரியல்ல..!

இளைய சமுதாயமே டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல "வாழ முயற்சி செய். காதலால் சீரழிக்காதே!!! மற்றவர்களையும் சீரழிக்காதே... ."

காதல் இல்லாமல் (இல்லாமலும் ) உலகம் இயங்கும்

வாலண்டைன்'ஸ் டே ஏன் நடிக்கணும்


இந்தக் கட்டுரை நம்மூரை நினைவில் கொண்டே எழுதப் பட்டது. இதனில் உண்மையாக தன் நேசிக்கும் ஒருவரை மணம் முடிக்க எண்ணி வியர்வை சிந்தும் நல்ல உள்ளங்கள் இந்தக் கட்டுரைச் சாடலிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஏனையதுகளுக்கு இந்தக் கட்டுரை ஒரு அவசியமான வாசிப்பாக அமைய வாய்ப்புண்டு.

தினகரனில் நான் படித்த விழுப்புரம் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து விடிய விடிய காதலி தர்ணா போன்ற போராட்டக் காதல்களுக்கு முன்னாலும், சில சமயத்தில் வீட்டு மிரட்டல்களையும் மீறி திருமணம் முடித்துக் கொண்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஹானர் கொலை (Honor Killing) போன்றே இங்கும் அது போலவே கண்டுபிடித்து உயிரோடு எரிக்கவும் துணியும் நிலையிலும், நன்றாக மூன்று, நான்கு வருடங்கள் ஒளிந்து மறைந்து கடலை வறுத்து, ஸ்பரிசம் உணர்ந்து திடீரென்று ஒரு நாள் காதலிக்கும் ஆண் மகனோ அல்லது அந்தப் பெண்ணோ நெஞ்சில் மாஞ்சா இல்லாமல் உருவிக் கொண்டு போவதைக் கொண்டும், ஒரு படி மேலேச் சென்று தன்னை விரும்பியவனையே நம்பிச் செல்லும் ஒரு சில பெண்களை வசதியாக ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி விட்டு தூக்கியெறிஞ்சிச் செல்லும் அவல நிலைக்கு முன்னாலும், நம்மூர் "வாலண்டைன்'ஸ் டே"ஒரு ஏமாற்று நாளாகத்தான் எனக்குப் படுகிறது.

இன்னும் போக வேண்டிய தொலைவை எங்கோ வைத்துக் கொண்டு எதற்காக இந்தப் பகட்டு, நாங்களும் உலகளவில் வளர்ந்து விட்டோமென்று தொலைகாட்சிகளில் நடித்துக் காட்டிக் கொள்வதற்காகவா இந்த நாள்? அல்லது வியாபாரத் தந்திரம் தெரிந்த பெரிசுகள் வைக்கும் விளக்கின் கீழ் விழும் விட்டில் பூச்சிகளாக இருப்பதற்காகவா? எதற்காக நீங்கலெல்லாம் இந்த வாலண்டைன்'ஸ் டே கொண்டாடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?

ஓவ்வொரு வருடமும் இந்தத் தொலைகாட்சிகளின் பேனை பெருமாளாக்கும் தனத்தால் வெகுண்டெழுந்து எழுத வேண்டுமென்று நினைத்து நினைத்து தள்ளிப் போட்டதை இந்த வருடம் கடைசியாக எழுதலாமென்று எழுதவும் செய்தாகிவிட்டது.

எனக்கு நம்மூர் சிறுசுகள், அதாவது இந்த விடலைகள் முப்பதுக்குள் இருப்பவர்களும் இதற்குள் அடக்கம் தான். ஏனெனில் அந்த வயதிலும் இன்னமும் ஒருத்தியை காதலிப்பதாக அழைத்துக் கொண்டு திரிபவர்கள், அதற்கென நாள் நெருங்கும் பொழுது எங்க அம்மாவும், அப்பாவும் என் பிணத்தின் மீது ஏறிப் போயி அவ கழுத்தில தாலியைக் கட்டுன்னு சொல்லி மிரட்டுறாங்கன்னு சொல்லிட்டு கடைசி நிமிட்ல அப்பீட் ஆகிக்கிறது பெரும்பான்மையா நடக்குதுன்னா, இவர்களை விடலைப் பசங்க லிஸ்ட்ல சேர்க்கலாமில்லையா?

எத்தனை கலப்புத் திருமணங்கள் இந்தியாவில் தினந்தோறும் நடந்தேறுகிறது, அதிலும் இந்த ஜாதி, மத, இனத் தொடர்பான வெட்டுக் கொத்து, ஆட் கடத்தல் போன்றவைகள் இல்லாமல்? உண்மை நிலை இப்படியாக இருக்க, எதற்காக தெரிந்தே இந்த ஏமாற்றுத் தனம், அதாவது என்னுயிர் உன்னிடத்தில், உன்னுயிர் என்னிடத்தில் என்றுக் கூறி நாட்களை இந்த ஒரு உயிர்ப்பூ நிலையில் வைத்தற்கோரி தற்காலிகமாக நகர்த்தும் ஏமாற்றுத் தனம். இங்கு ஏமாற்றுத் தனம் என்றழைக்கக் காரணம் அந்த உறவில் ஈடுபட்டிருக்கும் இருவருக்குமே தெரிகிறது, இது இறுதி நிலையை அடையப் போவது கிடையாது என்று அறிந்தே இருவரும் ஒரு வரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு நடித்தித் திரிவதற்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு எதற்கு வெள்ளைகாரத் துரைகள் தன் காதலியினடத்தே அல்லது தன் மனைவியிடத்தே பக்குவமாக, உண்மையாகவே காட்டப் பயன் படுத்தும் ஒரு நாள் உங்கள் கைகளில் ஒரு ஏமாற்றுத் தினமாக? ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆணையோ விரும்பவதற்கு முன்னால் உன் பின்புலத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டாயா - எது போன்ற மக்களை உனது குடும்பம் பெற்றிருக்கிறது, அருவாக் கலாச்சாரம் கொண்டதா, மத, ஜாதி பித்து பிடித்திருக்கிறதா அல்லது உன் நலமே எங்களின் நலமென்ற பண்பாடு கொண்ட குடும்பமா?

அப்படி இல்லாதப் பட்சத்தில் உனது மனத் தைரியத்தை கேள்வி நிலைக்கு இட்டுச் சென்றாயா - எந் நிலையிலும் எல்லா பிரச்சினைகளையும் சந்திக்க தயாராகி விட்டோமா, எனது சமூக, பொருளாதார, மனப் பக்குவம் பின்னால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் பொருட்டு எனது மன நிலை என்னவாகா இருக்கிறது போன்ற கேள்விகள் கேட்டறிந்திருக்கிறாயா? இது போன்ற நிலையில் ஆக்கப் பூர்வமான போராட்டத்திற்கு தயாராகமல் தன்னை அதற்கு ஒரு தகுதியானவனாக ஆக்கிக் கொள்வதற்கு முன்னர் எதற்கு இப்படி ஒருவரை ஒருவர் ஏப்ரல் ஃபூல் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்........

இன்னமும் இந்தியாவில் இந்த காதல் திருமணங்கள் என்பது ஃபாண்டஸி நிலையிலயே தேக்கமுற்றுப் போனதால்தான் அதன் பொருட்டே கச்சடா திரைக்கதைகளைக் கொண்டு கதைச் சொல்லி சினிமா உலகம் காசு பார்த்துக் கொண்டுள்ளது. இந் நிலையில் இந்த மேற்கத்திய "வாலண்டைன்ஸ் டே" வியாபாரம் கூடக் கொடி கட்டிப் பறக்கலாம் அங்கே. காரணம், ஃபாண்டஸி நிலையில் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்...

ஆக மொத்தத்தில் இவனுங்களுக்கு (காதலிக்கிறவங்களுக்கு) உண்மையான guts இருந்தால் காதலிப்பவளையே கரம் பிடித்து பிறகு இன்று இந்த ஃபாண்டஸி நிலையில் செய்வதை தொடரட்டும் நான் ஒத்துக் கொள்கிறேன், இவனுங்க a real gutsy guys என்று. அதுவரைக்கும் இது ஒரு பேத்தல், "ஏப்ரல் ஃபூல் டே," to pacify each other ... shame on them...!